sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அங்கே நாத்திகம்; இங்கே ஆத்திகம் கோவில்களில் குவிந்த தி.மு.க.,வினர்!

/

அங்கே நாத்திகம்; இங்கே ஆத்திகம் கோவில்களில் குவிந்த தி.மு.க.,வினர்!

அங்கே நாத்திகம்; இங்கே ஆத்திகம் கோவில்களில் குவிந்த தி.மு.க.,வினர்!

அங்கே நாத்திகம்; இங்கே ஆத்திகம் கோவில்களில் குவிந்த தி.மு.க.,வினர்!


ADDED : ஜூலை 25, 2011 09:38 PM

Google News

ADDED : ஜூலை 25, 2011 09:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரூர் : பொதுக்குழு கூட்டத்துக்காக கோவை வந்த வெளியூர் தி.மு.க., வினர், புறநகர் பகுதிகளில் உள்ள கோவில்களில் சாமி கும்பிட குவிந்தனர்.

கோவையில் தி.மு.க., வின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில், பங்கேற்பதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் கோவையில் குவிந்தனர். செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடந்த 24, 25ம் தேதிகளில், புறநகர் பகுதியிலுள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் மற்றும் பிரசித்தி பெற்ற கோவில்களை நோக்கி தி.மு.க., வினர் படையெடுத்தனர். முக்கியமாக, மருதமலை சுப்ரமணியசாமி கோவில், பேரூர் பட்டீஸ்வரர் கோவில், ஈஷா யோக மையம் ஆகிய பகுதிகளுக்கு, தி.மு.க.,வினர் காலை முதல் மாலை வரை வந்த வண்ணம் இருந்தனர். வாகனங்களின் முன் தி.மு.க., கொடியை பறக்கவிட்டவாறு, கரைவேட்டி சகிதமாக வந்திறங்கிய தி.மு.க., வினர், கோவிலுக்குச் சென்று, நீண்டவரிசையில் நின்று சுப்ரமணியர், பட்டீஸ்வரரை பயபக்தியுடன் தரிசித்தனர். விபூதியை நெற்றியில் பூசியவாறு, கோவிலின் உள்பிரகாரம், வெளிப்பிரகாரங்களையும் ஆர்வத்துடன் சுற்றிவந்தனர். சிலர் கோவை குற்றாலம், கோவை கொண்டாட்டம் ஆகிய பகுதிகளுக்கும், 'விசிட்' அடித்தனர்.








      Dinamalar
      Follow us