sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரயில்களில் அரிசி கடத்தல் ரயில்வே போலீஸ் மெத்தனம்

/

ரயில்களில் அரிசி கடத்தல் ரயில்வே போலீஸ் மெத்தனம்

ரயில்களில் அரிசி கடத்தல் ரயில்வே போலீஸ் மெத்தனம்

ரயில்களில் அரிசி கடத்தல் ரயில்வே போலீஸ் மெத்தனம்


ADDED : ஜூலை 25, 2011 09:45 PM

Google News

ADDED : ஜூலை 25, 2011 09:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : ரயில்வே போலீசாரின் அலட்சியத்தால், கோவை வழியாக செல்லும் ரயில்களில் அரிசி கடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

அரிசி கடத்தும் கும்பல், பயணிகள் போல் ரயில் நிலையங்களில் 'உலா' வருகின்றனர். சாதாரண துணிப் பைகளில் அரிசியை நிரப்பிக்கொண்டு ரயில் பெட்டிகளில் நுழைகின்றனர். பிறகு, ரயில் கழிவறைகளில் மறைமுகமாக வைத்துள்ள சாக்குப் பைகளில் முழுமையாக நிரப்பி, மூட்டையை தைத்து விடுகின்றனர். கழிப்பறை செல்லும் பயணிகள் பெரும்பாலும் அவற்றை கண்டு கொள்வதில்லை. காரணம், ரயில் நிர்வாகத்துக்கு சொந்தமான பொருள் என்று ஏமாந்து விடுகின்றனர். அரிசியை எடுத்து செல்லும் இடம் வருவதற்கு முன்னதாக, மீண்டும் தான் கொண்டு வந்துள்ள துணிப் பைகளில் அரிசியை நிரப்பி, சாதாரண பயணிகள் போல், சுலபமாக கடத்தி சென்று விடுகின்றனர். பெரியளவில் கடத்தல் சம்பவங்கள் நடந்த பின்னரே போலீசார் உஷாராகின்றனர்.








      Dinamalar
      Follow us