sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பருவமழை தீவிரம் நீர்மின் உற்பத்தி பணி துரிதம்

/

பருவமழை தீவிரம் நீர்மின் உற்பத்தி பணி துரிதம்

பருவமழை தீவிரம் நீர்மின் உற்பத்தி பணி துரிதம்

பருவமழை தீவிரம் நீர்மின் உற்பத்தி பணி துரிதம்


ADDED : ஜூலை 25, 2011 09:46 PM

Google News

ADDED : ஜூலை 25, 2011 09:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை : தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், சோலையாறு அணை விரைவில் நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

நீர் மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி தீவிரமடைந்துள்ளது. வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி சோலையாறு 21 மி.மீ., வால்பாறை 12; அப்பர் நீராறு 45 மி.மீ., லோயர் நீராறு 45 மி.மீ., மழை பதிவானது. நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் சோலையாறு அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 2,175 கன அடியாக அதிகரித்து நேற்றைய காலை நிலவரப்படி 150 அடியாக நீர் மட்டம் உயர்ந்தது. மொத்த கொள்ளளவு 160 அடியில் 150 அடியாக நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் பொதுப்பணித்துறையினர் கண்காணிப்பு பணிகளை அதிகப்படுத்தியுள்ளனர். அணையிலிருந்து மானாம்பள்ளி பவர் ஹவஸ் வழியாக 796 கன அடி வெளியேற்றப்படுவதில் 35 மெகா வாட் மின்சாரமும், சோலையாறு பவர் ஹவுஸ் வழியாக வினாடிக்கு 634 கன அடி தண்ணீர் கேரளாவுக்கு வெளியேற்றப்படுவதில், 70 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தியாகிறது. காடாம்பாறை அணைக்கு அக்காமலை போன்ற பகுதிகளிலிருந்து நீர் வரத்து அதிகரித்துள்ளதால் பவர் ஹவுசில் உற்பத்தி தீவிரமடைந்துள்ளது. நேற்று காடாம்பாறை பவர் ஹவுசில் 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது.








      Dinamalar
      Follow us