sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அரசு பொருட்காட்சி நிறைவு ரூ.37 லட்சம் வருவாய்

/

அரசு பொருட்காட்சி நிறைவு ரூ.37 லட்சம் வருவாய்

அரசு பொருட்காட்சி நிறைவு ரூ.37 லட்சம் வருவாய்

அரசு பொருட்காட்சி நிறைவு ரூ.37 லட்சம் வருவாய்


ADDED : ஜூலை 11, 2011 09:54 PM

Google News

ADDED : ஜூலை 11, 2011 09:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோவையில் கடந்த 60 நாட்களாக நடந்து வந்த அரசு பொருட்காட்சி நேற்று முன்தினம் நிறைவு பெற்றது.

டிக்கெட் விற்பனை மூலம் 37 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. கோவையில் வழக்கமாக கோடை விடுமுறையில் அரசு பொருட்காட்சி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சற்று முன்னதாக, தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன் பொருட்காட்சி நடந்தது. இந்த பொருட் காட்சி வழக்கமான பொருட்காட்சியைப் போலவே நடந்தாலும், முந்தைய அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடையச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் நடத்தப் பட்டது. இதன் பின் ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையில் நடத்தப்படுவது போல், கடந்த மே 11ல் இரண்டாவது முறையாக பொருட்காட்சி துவங்கியது. ஜூனில் பள்ளிகள் துவங்கி விட்டதால், சாதாரண நாட்களை விட சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களில் மட்டுமே அதிக கூட்டம் காணப்பட்டது. 60 நாட்கள் நடந்த பொருட்காட்சி, நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது. இக்கண்காட்சியை 31 ஆயிரத்து 640 பெரியவர்கள், 2,330 குழந்தைகள் என மொத்தம் 33 ஆயிரத்து 970 பேர் பார்வையிட்டுள்ளனர். டிக்கெட் விற்பனை வாயிலாக 37 லட்சத்து74 ஆயிரத்து 660 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இதைத் தவிர, பொருட்காட்சியில் கடைகள் அமைத்தவர்கள் வாயிலாக கிடைத்துள்ள வருமானம் தனி.






      Dinamalar
      Follow us