sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தேர்தலை புறக்கணிப்பதாக பொதுமக்கள் ஆவேசம்

/

தேர்தலை புறக்கணிப்பதாக பொதுமக்கள் ஆவேசம்

தேர்தலை புறக்கணிப்பதாக பொதுமக்கள் ஆவேசம்

தேர்தலை புறக்கணிப்பதாக பொதுமக்கள் ஆவேசம்


ADDED : செப் 25, 2011 01:15 AM

Google News

ADDED : செப் 25, 2011 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி :அவிநாசி 8வது வார்டில் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.அவிநாசி பேரூராட்சி, 8வது வார்டுக்கு உட்பட்ட பழைய சந்தைக்கடை தோட்டம் உள்ளது.

இப்பகுதியில் சாக்கடை வசதி ஏற்படுத்தவில்லை; ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை என கூறி, தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்து, அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.அதில், தேர்தல் புறக்கணிப்பு:சந்தைக்கடை தோட்டம் 8வது வார்டில் கடந்த ஐந்தாண்டில் சாக்கடை வசதி ஏற்படுத்தாததை கண்டித்தும், வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல் இருப்பதை கண்டித்தும் தேர்தலை புறக்கணிப்பு செய்கிறோம், என்று குறிப்பிட்டுள்ளனர்.அப்பகுதி மக்களிடம் கேட்ட போது, ''பலமுறை பேரூராட்சிக்கு தெரியப்படுத்தியும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. ''சாக்கடை கழிவு நீர் வெளியேற வழியில்லாமல், குட்டை போல் தேங்கியுள்ளதால், கொசு மூலம் பல்வேறு நோய் தாக்குகிறது; இதனால் வரும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். ''இப்பகுதி பிரச்னையை எந்த வேட்பாளர் முடித்து கொடுப்பதாக உறுதியளிக்கிறாரோ, புறக்கணிப்பு முடிவை மாற்றி, அவருக்கு ஓட்டளிப்போம்,'' என்றனர்.








      Dinamalar
      Follow us