ADDED : ஜூலை 25, 2011 09:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : ஆனைகட்டியில் இருந்து வந்த பஸ்சை நேற்று முன்தினம் போலீசார் சோதனை யிட்டனர்.
கவுண்டம்பாளையம், மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த சிதம்பரநாதன்(70)என்பவர் வைத்திருந்த பையை சோதனை நடத்தினர். அதில், ஹார்லிக்ஸ், போன்விட்டா பாட்டில்கள் அதிகம் காணப்பட்டன. சந்தேகமடைந்த போலீசார், பாட்டில்களை திறந்து பார்த்தபோது, அதில் கஞ்சா கடத்தி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, 1.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. முதியவரை போலீசார் கைது செய்தனர்.