sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரூ.16  கோடி மோசடி வழக்கில்  நிதி நிறுவனருக்கு '10 ஆண்டு'

/

ரூ.16  கோடி மோசடி வழக்கில்  நிதி நிறுவனருக்கு '10 ஆண்டு'

ரூ.16  கோடி மோசடி வழக்கில்  நிதி நிறுவனருக்கு '10 ஆண்டு'

ரூ.16  கோடி மோசடி வழக்கில்  நிதி நிறுவனருக்கு '10 ஆண்டு'


ADDED : ஆக 31, 2024 12:29 AM

Google News

ADDED : ஆக 31, 2024 12:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:கோவை, டாடாபாத்தில், முல்லை குரூப் ஆப் கம்பெனிஸ் என்ற நிதி நிறுவனத்தின் தலைமை அலுவலகம், 2018 - 19ம் ஆண்டுகளில் செயல்பட்டு வந்தது. இதன் கிளை அலுவலகம் கோபி, ஈரோடு, மேட்டூரில் இயங்கியது.

நிறுவனத்தில் ஆடு, மாடு வளர்ப்பு திட்டத்தில், 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மாதம், 8,000 முதல் 20,000 ரூபாய் வரையும், தங்க நகை திட்டத்தில் 13,000 ரூபாய் முதலீடு செய்தால், 101 நாட்கள் கழித்து, 1 சவரன் தங்க நாணயம் வழங்கப்படும் என, அறிவித்தனர்.

அதை உண்மை என நம்பி, 387 பேர், 15.92 கோடி ரூபாய் முதலீடு செய்தனர். ஆனால், டிபாசிட்தாரர்களுக்கு பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றினர். புகாரின்படி, கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், நிதி நிறுவன உரிமையாளர் சேலம், குளத்துார் அருகேயுள்ள ஆலமரத்து பட்டியை சேர்ந்த குறிஞ்சிநாதன், 42, சேலம் கதிர்வேல், 39, அண்ணாதுரை, சத்தியமூர்த்தி, 37, அருணாரெமி ஆகியோரை கைது செய்தனர்.

இவர்கள் மீது, கோவை 'டான்பிட்' கோர்ட்டில்வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. நீதிபதி செந்தில்குமார், குற்றம்சாட்டப்பட்டவர்களில், குறிஞ்சிநாதனுக்கு, 10 ஆண்டு சிறை, 15.92 கோடி ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us