sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

10,123 மரக்கன்று நட முடிவு மாநகராட்சி கமிஷனர் தகவல்

/

10,123 மரக்கன்று நட முடிவு மாநகராட்சி கமிஷனர் தகவல்

10,123 மரக்கன்று நட முடிவு மாநகராட்சி கமிஷனர் தகவல்

10,123 மரக்கன்று நட முடிவு மாநகராட்சி கமிஷனர் தகவல்


ADDED : மே 28, 2024 01:08 AM

Google News

ADDED : மே 28, 2024 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பில், கோவையில் மரக்கன்று நடும் பணியை, கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று, துவக்கி வைத்தார்.

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட குறிச்சி ஹவுசிங் யூனிட் பகுதியில் மரக்கன்று நடும் பணியை துவக்கி வைத்த கமிஷனர் கூறுகையில், ''சுற்றுச்சூழலையும், இயற்கை வளங்களையும் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. மாநகராட்சி பூங்காக்கள், குளக்கரை, நீர்வழித்தடங்களின் கரைகள் என, 264 இடங்களில், வேம்பு, பூவரசன், புங்கன், நாவல் என, 10 ஆயிரத்து, 123 மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்கப்படும்,'' என்றார்.

நிகழ்ச்சியில், உதவி கமிஷனர் (பொ) இளங்கோவன், உதவி நிர்வாக பொறியாளர் கனகராஜ், மண்டல சுகாதார அலுவலர் ஆண்டியப்பன், உதவி பொறியாளர் சபரிராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us