sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 158 மையங்களில் இன்று துவக்கம்

/

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 158 மையங்களில் இன்று துவக்கம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 158 மையங்களில் இன்று துவக்கம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 158 மையங்களில் இன்று துவக்கம்


ADDED : மார் 26, 2024 01:31 AM

Google News

ADDED : மார் 26, 2024 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;கோவை மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, 40 ஆயிரத்து, 329 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்.

சமச்சீர் கல்வி முறையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று (26ம் தேதி) துவங்கி, ஏப்., 8ம் தேதி வரை நடைபெறுகிறது. கோவை வருவாய் மாவட்டத்தில், 19 ஆயிரத்து, 995 மாணவர்கள், 20 ஆயிரத்து, 334 மாணவியர் என, 40 ஆயிரத்து, 329 மாணவ, மாணவியர் தேர்வெழுதுகின்றனர்.

இதில், 742 மாற்றுத்திறனாளி மாணவர்கள் அடக்கம். மேலும், 1,099 மாணவர்கள், 487 மாணவியர், ஒரு மூன்றாம் பாலினத்தவர் என, 1,587 பேர் தனித்தேர்வர்களாக எழுத உள்ளனர்.

மொத்தம், 158 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. தேர்வுக்கான வினாத்தாள்கள் பாதுகாப்பாக வைக்க, 11 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.இம்மையங்களில் இருந்து ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்புடன் வினாத்தாள் எடுத்துச் செல்ல, 46 வழித்தட அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள், பறக்கும்படை உறுப்பினர்கள், வழித்தட அலுவலர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் என, 2,860 அலுவலர்கள் தேர்வு பணியில் ஈடுபட்டுள்ளதாக, கோவை முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us