ADDED : ஏப் 12, 2024 12:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை அருகில் தோலம்பாளையம் பகுதியில் நேற்று முன் தினம் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த மேட்டுப்பாளையத்தை சேர்ந்த முனுசாமி, 29, உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 1 லட்சத்து 17 ஆயிரத்து 100 வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.---

