sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

14வது 'சென்டீஸ்' சாம்பியன்ஷிப் போட்டி; நான்கு மாவட்ட அணிகள் ஆர்வம்

/

14வது 'சென்டீஸ்' சாம்பியன்ஷிப் போட்டி; நான்கு மாவட்ட அணிகள் ஆர்வம்

14வது 'சென்டீஸ்' சாம்பியன்ஷிப் போட்டி; நான்கு மாவட்ட அணிகள் ஆர்வம்

14வது 'சென்டீஸ்' சாம்பியன்ஷிப் போட்டி; நான்கு மாவட்ட அணிகள் ஆர்வம்


ADDED : பிப் 27, 2025 09:16 PM

Google News

ADDED : பிப் 27, 2025 09:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரியில், 14வது 'சென்டீஸ்' சாம்பியன்ஷிப் போட்டிகள் நேற்று துவங்கியது; நாளை நிறைவடைகிறது.

கூடைப்பந்து போட்டியில், கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த, 18 கல்லுாரி அணிகள் பங்கேற்றுள்ளன. கால்பந்து போட்டியில், 19 அணிகளும், கோ-கோ போட்டியில், 15 அணிகளும் விளையாடுகின்றன. கல்லுாரி முதல்வர் டேவிட் ரத்னராஜ், உடற்கல்வி இயக்குனர் வேலுச்சாமி ஆகியோர் கால்பந்து போட்டிகளை நேற்று துவக்கிவைத்தார்.

கால்பந்து முதல் போட்டியில் குமரகுரு தொழில்நுட்பக் கல்லுாரி அணி, 3-0 என்ற கோல் கணக்கில் பெருந்துறை நந்தா தொழில்நுட்பக் கல்லுாரி அணியை வீழ்த்தியது. கலைஞர் கருணாநிதி கல்லுாரி அணி, 5-0 என்ற கோல்களில் இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லுாரி அணியையும் வென்றது.

நேரு தொழில்நுட்பக் கல்லுாரி அணி, 4-3 என்ற கோல்களில் இந்துஸ்தான் இன்ஜி., கல்லுாரியையும், ஈரோடு கொங்கு கல்லுாரி அணி, 1-0 என்ற கோல்களில் ஸ்ரீ சக்தி கல்லுாரி அணியையும் வென்றன. தொடர்ந்து, போட்டிகள் நடந்துவருகின்றன.






      Dinamalar
      Follow us