/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
14வது 'சென்டீஸ்' சாம்பியன்ஷிப் போட்டி; நான்கு மாவட்ட அணிகள் ஆர்வம்
/
14வது 'சென்டீஸ்' சாம்பியன்ஷிப் போட்டி; நான்கு மாவட்ட அணிகள் ஆர்வம்
14வது 'சென்டீஸ்' சாம்பியன்ஷிப் போட்டி; நான்கு மாவட்ட அணிகள் ஆர்வம்
14வது 'சென்டீஸ்' சாம்பியன்ஷிப் போட்டி; நான்கு மாவட்ட அணிகள் ஆர்வம்
ADDED : பிப் 27, 2025 09:16 PM
கோவை; ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரியில், 14வது 'சென்டீஸ்' சாம்பியன்ஷிப் போட்டிகள் நேற்று துவங்கியது; நாளை நிறைவடைகிறது.
கூடைப்பந்து போட்டியில், கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த, 18 கல்லுாரி அணிகள் பங்கேற்றுள்ளன. கால்பந்து போட்டியில், 19 அணிகளும், கோ-கோ போட்டியில், 15 அணிகளும் விளையாடுகின்றன. கல்லுாரி முதல்வர் டேவிட் ரத்னராஜ், உடற்கல்வி இயக்குனர் வேலுச்சாமி ஆகியோர் கால்பந்து போட்டிகளை நேற்று துவக்கிவைத்தார்.
கால்பந்து முதல் போட்டியில் குமரகுரு தொழில்நுட்பக் கல்லுாரி அணி, 3-0 என்ற கோல் கணக்கில் பெருந்துறை நந்தா தொழில்நுட்பக் கல்லுாரி அணியை வீழ்த்தியது. கலைஞர் கருணாநிதி கல்லுாரி அணி, 5-0 என்ற கோல்களில் இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லுாரி அணியையும் வென்றது.
நேரு தொழில்நுட்பக் கல்லுாரி அணி, 4-3 என்ற கோல்களில் இந்துஸ்தான் இன்ஜி., கல்லுாரியையும், ஈரோடு கொங்கு கல்லுாரி அணி, 1-0 என்ற கோல்களில் ஸ்ரீ சக்தி கல்லுாரி அணியையும் வென்றன. தொடர்ந்து, போட்டிகள் நடந்துவருகின்றன.