sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

1.52 லட்சம் மரக்கன்று நட்ட 'காவேரி கூக்குரல்'

/

1.52 லட்சம் மரக்கன்று நட்ட 'காவேரி கூக்குரல்'

1.52 லட்சம் மரக்கன்று நட்ட 'காவேரி கூக்குரல்'

1.52 லட்சம் மரக்கன்று நட்ட 'காவேரி கூக்குரல்'


ADDED : ஜூலை 09, 2024 11:24 PM

Google News

ADDED : ஜூலை 09, 2024 11:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்தூர்:தமிழகம் முழுதும், காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில், வன மகோத்சவத்தை ஒட்டி, 1.52 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

காவேரி கூக்குரல் இயக்கம், தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களில் உள்ள காவிரி வடிநில பகுதிகளில் மரம் சார்ந்த விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, அது சார்ந்த வேளாண் பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறது.

இந்நிலையில், மக்களிடம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மரம் வளர்க்கும் பழக்கத்தை ஊக்குவிக்கவும், தேசிய அளவில் ஆண்டுதோறும் ஜூலை முதல் வாரம், வன மகோத்சவம் விழா கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு, காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில், தமிழகத்தின் 38 மாவட்டங்களில் உள்ள 86 இடங்களில், 472 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்களில் மொத்தம், 1.52 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

இவ்வியக்கம், வன மகோத்சவம் மட்டுமின்றி, உலக சுற்றுச்சூழல் தினம், காந்தி ஜெயந்தி, நதிகளுக்கு புத்துயிரூட்டும் தினம், நம்மாழ்வார், நெல் ஜெயராமன், மரம் தங்கசாமி போன்ற சூழலியல் முன்னோடிகளின் நினைவு நாட்களிலும், மரம் நடுவிழா நடத்தி வருகிறது.

ஈஷா நாற்றுப்பண்ணைகள் மூலமாக, இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட விலை மதிப்பு மிக்க மரக்கன்றுகளை, விவசாயிகளுக்கு 3 ரூபாய் மானிய விலையில் வழங்குகிறது.






      Dinamalar
      Follow us