/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கேரளாவுக்கு கடத்த முயன்ற 20 டன் ரேஷன் அரிசி சிக்கியது
/
கேரளாவுக்கு கடத்த முயன்ற 20 டன் ரேஷன் அரிசி சிக்கியது
கேரளாவுக்கு கடத்த முயன்ற 20 டன் ரேஷன் அரிசி சிக்கியது
கேரளாவுக்கு கடத்த முயன்ற 20 டன் ரேஷன் அரிசி சிக்கியது
ADDED : ஏப் 11, 2024 12:27 AM
போத்தனூர் : 'மதுக்கரை அருகே கொச்சின்-- - சேலம் சாலையில், சுங்கசாவடி அருகே குடிமை பொருள் வழங்கல் குற்றபுலனாய்வு துறை கோவை சரக டி.எஸ்.பி., ஜனனி பிரியா, இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அவ்வழியே வந்த டாரஸ் லாரியை நிறுத்த சைகை செய்தபோது நிற்காமல் சென்றது. போலீசார் லாரியை துரத்தி பிடித்து, சோதனை செய்தனர். 440 மூட்டைகளில் சுமார், 20 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரிந்தது. லாரி மற்றும் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. டிரைவரிடம் நடத்திய விசாரணையில், பொள்ளாச்சியை சேர்ந்த மணி, 41, ஆந்திராவிலிருந்து கேரளாவுக்கு கடத்திச் செல்வது தெரிந்தது.
தொடர்ந்து அவர், மணி மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். இதில் தொடர்பு டைய நான்கு பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

