/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுவாணியில் 24 மி.மீ., மழைப்பதிவு
/
சிறுவாணியில் 24 மி.மீ., மழைப்பதிவு
ADDED : ஜூலை 01, 2024 01:31 AM
கோவை;சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில், 24 மி.மீ., மழை பதிவாகியுள்ளது; நீர் மட்டம், 23.52 அடியாக உயர்ந்திருக்கிறது.
கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில நாட் களாக மழைப்பொழிவு காணப்படுகிறது. இதன் காரணமாக, வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை உருவாகியிருக்கிறது.
மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில், கேரள வனப்பகுதியில் அமைந்துள்ள சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில், 24 மி.மீ., மழை பதிவாகியிருக்கிறது.
அடிவாரத்தில், 5 மி.மீ., மழை பெய்துள்ளது. குடிநீருக்காக, 54 எம்.எல்.டி., தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. மழையின் காரணமாக, அணையின் நீர்மட்டம், 23.52 அடியாக உயர்ந்துள்ளது.
அடுத்து வரும் ஓரிரு நாட்களில், மிதமானது முதல் கனமழை வரை பெய்ய, வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.