/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலீஸ் அக்கா திட்டத்தில் 492 மாணவியர் புகார்
/
போலீஸ் அக்கா திட்டத்தில் 492 மாணவியர் புகார்
ADDED : ஆக 30, 2024 10:27 PM
கோவை:மாநகர போலீசின் போலீஸ் அக்கா திட்டத்தில் தற்போது வரை 492 பேர் புகார் அளித்துள்ளனர்.
மாநகர போலீசின் 'போலீஸ் அக்கா' திட்டம் கடந்த 2022ம் ஆண்டு ஆக., மாதம் துவங்கப்பட்டது. இத்திட்டத்தில், கோவை மாநகர எல்லைக்குட்பட்ட ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனில் இருந்தும் பெண் காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, கோவை மாநகர எல்லைக்குள் உள்ள, 70 கல்லுாகளில் சைபர் கிரைம் உதவி எண் 1930, பாலியல் வண்கொடுமைகள் பாதுகாக்க அவசர உதவி எண் 1098, 181, காவலன் ஆப் மற்றம் சிட்டிசன் 'போர்டல்' குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்திற்கு மாணவியர் மற்றும் பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தகவல் அளிக்கும் மாணவியரின் விவரங்கள் வெளியில் தெரியாத வகையில் பாதுகாக்கப்படுவதால் பல்வேறு கல்லுாரி மாணவியர் தங்களுக்கு பிரச்னை ஏற்பட்டால் போலீஸ் அக்காவை தேடுகின்றனர்.
இந்நிலையில், தற்போது வரை இத்திட்டத்தில் 492 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதில் ஒன்பது புகார்கள் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 51 புகார்களுக்கு சி.எஸ்.ஆர்., போடப்பட்டுள்ளது.
மேலும், பல்வேறு புகார்களில் சம்பந்தப்பட்ட நபர்களை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து அறிவுரை அளிக்கப்பட்டு தீர்வும் காணப்பட்டது.