/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முள்ளம்பன்றியை வேட்டையாடிய 6 பேர் கைது
/
முள்ளம்பன்றியை வேட்டையாடிய 6 பேர் கைது
ADDED : ஆக 01, 2024 12:54 AM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, முள்ளம்பன்றியை வேட்டையாடி சமைத்த ஆறு பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
பொள்ளாச்சி அருகே, முள்ளம்பன்றி வேட்டையாடுவதாக வனச்சரகர் ஞானபாலமுருகனுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், வனச்சரகர் மற்றும் வனத்துறை அதிகாரிகள், கொங்கலப்பம்பாளையத்தை சேர்ந்த டாக்டர் ஆறுமுகம் என்பவரது தோட்டத்தில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, ஜெயப்பிரகாஷ், தெய்வராஜ், ரங்கசாமி, லோகேஷ், தீபன், மோகன்ராஜ் ஆகியோர் கொங்கலப்பம்பாளையம் ஆற்றுப்படுகை பகுதியில் வலை வைத்து முள்ளம்பன்றியினை வேட்டையாடி, டாக்டர் தோட்டத்து சாளையில் சமைத்தது தெரியவந்தது.
சம்பவ இடத்திலேயே பிடித்து விசாரணை மேற்கொண்டு, அவர்களை கைது செய்து ஆனைமலை வனத்துறை அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
இதையடுத்து, அவர்களை ஜே.எம்., எண் 2 கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பொள்ளாச்சி கிளை சிறையில் அடைத்தனர்.
வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியிலும், வயல்களிலும், முயல், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடுவது குற்றமாகும். இதுபோன்ற அத்துமீறல் இருந்தால், மக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும், என, வனத்துறையினர் தெரிவித்தனர்.