sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தென்னை விவசாயிகளுக்கு  இடுபொருள் வழங்கும் விழா 

/

தென்னை விவசாயிகளுக்கு  இடுபொருள் வழங்கும் விழா 

தென்னை விவசாயிகளுக்கு  இடுபொருள் வழங்கும் விழா 

தென்னை விவசாயிகளுக்கு  இடுபொருள் வழங்கும் விழா 


ADDED : செப் 06, 2024 02:46 AM

Google News

ADDED : செப் 06, 2024 02:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆனைமலை:ஆனைமலை அருகே, பழங்குடியின தென்னை விவசாயிகளுக்கு பயிற்சி மற்றும் இடுபொருட்கள் வழங்கும் விழா நடந்தது.

ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையம், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக அகில இந்திய ஒருங்கிணைந்த பனைப்பயிர்கள் ஆராய்ச்சி திட்டத்தின் கீழ், தென்னை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி மற்றும் இடு பொருட்கள் வழங்கும் விழா, சின்னார்பதி மலை கிராமத்தில் நடந்தது.

தென்னை ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர் மற்றும் தலைவர் சுதாலட்சுமி தலைமை வகித்து, தென்னை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினார். மேலும், தென்னையில் மேம்பட்ட ரகங்கள் குறித்து தோட்டக்கலை பேராசிரியர் ராஜலிங்கம், உழவியல் தொழில்நுட்பங்கள் மற்றும் உர மேலாண்மை என்ற தலைப்பில் முனைவர் தவபிரகாஷ், தென்னையில் ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை குறித்து முனைவர் லதா ஆகியோர் பேசினர்.

தென்னையில் பூச்சி மேலாண்மை குறித்து, வேளாண் பூச்சியியல் இணை பேராசிரியர் முனைவர் அருள்பிரகாஷ் பேசினார். பங்கேற்ற பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகள், மண்புழு உரம், பேசில்லஸ், டிரைக்கோடெர்மா மற்றும் தென்னை டானிக் போன்ற இடுபொருட்கள் வழங்கப்பட்டன. பயிர் நோயியல் பேராசிரியர் மீனா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை ஆராய்ச்சி நிலை அலுவலர்கள் செய்து இருந்தனர்.






      Dinamalar
      Follow us