sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'ஒரு பயிரின் வளர்ச்சிக்கு 17 வகை சத்துக்கள் தேவை'

/

'ஒரு பயிரின் வளர்ச்சிக்கு 17 வகை சத்துக்கள் தேவை'

'ஒரு பயிரின் வளர்ச்சிக்கு 17 வகை சத்துக்கள் தேவை'

'ஒரு பயிரின் வளர்ச்சிக்கு 17 வகை சத்துக்கள் தேவை'


ADDED : ஜூலை 11, 2024 06:21 AM

Google News

ADDED : ஜூலை 11, 2024 06:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனூர் : மதுக்கரை வட்டார வேளாண் துறை சார்பில், ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பண்ணை பள்ளி நடந்தது,

மாவுத்தம்பதியில் நடந்த இப்பள்ளியில், வட்டார தொழில்நுட்ப மேலாளர் தனபிரியா அட்மா திட்ட செயல்பாடுகள் குறித்து விளக்கினார். வேளாண் உதவி இயக்குனர் சுதா பேசுகையில், பண்ணை பள்ளி என்பது, விதைப்பு முதல் அறுவடை வரை தேவைப்படும் தொழில்நுட்பங்களை விளக்குவதாகும். மாவுத்தம்பதி கிராமம், அனைத்து ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது, என கூறினார்.

காரமடை வேளாண் அறிவியல் நிலைய தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுனர் சகாதேவன் பேசுகையில், ஒரு பயிரின் வளர்ச்சிக்கு, 17 வகை சத்துக்கள் தேவை. இதில், கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் ஆகியவை இயற்கையாகவே கிடைக்கின்றன. பேரூட்ட சத்துக்களான தழை, மணி, சாம்பல் சத்துக்கள், இரண்டாம் நிலை ஊட்டச்சத்துக்களான மாங்கனீஸ் போன்றவை மகசூலுக்கு காரணமாகின்றன, என்றார்.

மேலும் குழித்தட்டு நாற்றங்கால் முறையில், காய்கறி நாற்றுகள் வளர்ப்பு குறித்து செயல்விளக்கம் அளித்தார். தோட்டக்கலை உதவி அலுவலர் கார்த்திக், மானிய திட்டங்கள் குறித்து கூறினார். வேளாண் உதவி அலுவலர் ஜெயபாரதி, தொழில்நுட்ப மேலாளர் நாகராஜ் ஏற்பாடுகளை செய்திருந்தனர். காய்கறி விவசாயிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us