sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மூடப்படாத சாக்கடை குழியில் பெண் விழுந்த விவகாரம் ஒப்பந்ததாரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

/

மூடப்படாத சாக்கடை குழியில் பெண் விழுந்த விவகாரம் ஒப்பந்ததாரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

மூடப்படாத சாக்கடை குழியில் பெண் விழுந்த விவகாரம் ஒப்பந்ததாரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

மூடப்படாத சாக்கடை குழியில் பெண் விழுந்த விவகாரம் ஒப்பந்ததாரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்


ADDED : ஜூன் 19, 2024 02:25 AM

Google News

ADDED : ஜூன் 19, 2024 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை,:கோவை, காந்திபுரம், 100 அடி ரோட்டின், இரு புறங்களிலும் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பாதாள சாக்கடை தூர்வாரும் பணி நடைபெற்றுள்ளது.

சாக்கடை மூடிகள் மிகவும் சேதமடைந்திருந்ததால், புதிய மூடிகள் பொருத்த முடிவு செய்திருந்தனர். இதன் காரணமாக, ஒரு வாரத்துக்கும் மேலாக சாக்கடை குழிகள் மூடப்படாமல் இருந்துள்ளன.

அந்த பகுதி மக்களும், வணிக நிறுவனத்தினரும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை புகாரளித்துள்ளனர்.

ஆனால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல், அலட்சியமாக இருந்துள்ளனர்.

இதனிடையே நேற்று முன்தினம், ஒரு பெண் மூடப்படாமல் இருந்த குழிக்குள் தவறி விழுந்தார்.

அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். காலில் பலத்த காயமடைந்த அந்த பெண், சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் விழுந்த பாதாள சாக்கடை குழி மூடப்பட்டது. இந்நிலையில், பணியை முறையாக மேற்கொள்ளாத ஒப்பந்ததாரருக்கு 50,000 ரூபாய் அபராதம் விதித்து, மாநகராட்சி கமிஷனர் உத்தர விட்டார். தொடர்ந்து மாநகராட்சியின், 48 வார்டு உதவி இன்ஜினியர் முருகேசனிடம் விளக்கம் கேட்டு 'மெமோ' அனுப்பியுள்ளார்.






      Dinamalar
      Follow us