/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஐந்து நாட்களுக்கு லேசாக தூறலாம்!
/
ஐந்து நாட்களுக்கு லேசாக தூறலாம்!
ADDED : ஆக 27, 2024 10:27 PM
கோவை;கோவை மாவட்டத்தில் இன்று முதல் செப்.1ம் தேதி வரை மிக லேசான தூறல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக, கோவை வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்த 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்ப நிலை 33 டிகிரி செல்சியஸாக இருக்கும். காற்றின் ஈரப்பதம் சற்று அதிகரித்து 80 சதவீதமாக இருக்கும். காற்றின் வேகம் கடந்தவாரத்தை விட குறைவாக, சராசரியாக மணிக்கு 18 கி.மீ., என்ற அளவில் இருக்கும்.
வரும் 5 நாட்களில் மேற்கு மண்டலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தூறல் அல்லது லேசான மழையை எதிர்பார்க்கலாம்.
கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை, வரும் 31ம் தேதி, ஆனைமலை, பொள்ளாச்சி தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் முறையே 10 மி.மீ., மற்றும் 9 மி.மீ., மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இத்தகவலை, கோவை, வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய முதன்மை அலுவலர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

