sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கிரிக்கெட் விளையாடும் போது மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

/

கிரிக்கெட் விளையாடும் போது மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

கிரிக்கெட் விளையாடும் போது மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

கிரிக்கெட் விளையாடும் போது மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு


ADDED : ஆக 12, 2024 12:29 AM

Google News

ADDED : ஆக 12, 2024 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்தூர்:ஆறுமுககவுண்டனூரில், கிரிக்கெட் விளையாடி கொண்டிருக்கும்போது, மயங்கி விழுந்த நபர் உயிரிழந்தார்.

குனியமுத்தூர், முத்துச்சாமி உடையார் வீதியை சேர்ந்தவர் செந்தில் குமார்,47; ஐ.டி., ஊழியர். இவருக்கு திருமணமாகி மனைவியும், இரு மகள்களும் உள்ளனர். செந்தில்குமார் வழக்கமாக வார விடுமுறையில், தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட சென்று விடுவார்.

அதேபோல, வார விடுமுறை தினமான நேற்று, காலை உணவு உண்ணாமல், நண்பர்களுடன் ஆறுமுககவுண்டனூரில் உள்ள மைதானத்திற்கு கிரிக்கெட் விளையாட வந்துள்ளார். விளையாடி கொண்டிருந்தபோது, திடீரென செந்தில் குமார் மயக்கமடைந்து, கீழே விழுந்தார்.

உடனடியாக, நண்பர்கள் செந்தில்குமாரை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர், வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து, பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us