sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தண்ணீர் வந்து ஒரு மாசமாச்சு; போராட்ட களத்தில் புலியகுளம்

/

தண்ணீர் வந்து ஒரு மாசமாச்சு; போராட்ட களத்தில் புலியகுளம்

தண்ணீர் வந்து ஒரு மாசமாச்சு; போராட்ட களத்தில் புலியகுளம்

தண்ணீர் வந்து ஒரு மாசமாச்சு; போராட்ட களத்தில் புலியகுளம்


ADDED : மார் 26, 2024 01:29 AM

Google News

ADDED : மார் 26, 2024 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;புலியகுளம் பகுதியில் குடிநீர் வராததால், சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை, போலீசார் அழைத்து சென்று சமாதானம் செய்தனர்.

கோவை மக்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக திகழும் சிறுவாணி, பில்லுார் அணைகளில் நீர் மட்டமானது வேகமாக சரிந்து வருகிறது. இதனால், குடிநீர் வினியோக இடைவெளி, 15 நாட்களை தாண்டி வருகிறது.

இச்சூழலில், மாநகராட்சி, 66வது வார்டு புலியகுளம் மெயின் ரோட்டை ஒட்டிய கல்லறை தோட்டம் அருகே வசிக்கும், 10க்கும் மேற்பட்டவர்கள் நேற்று குடிநீர் வராததை கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

இதையறிந்த போலீசார், அருகே இருக்கும் புலியகுளம் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

தண்ணீர் கிடைக்கவும், பாதிப்புகளை சரி செய்யவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து, வீடுகளுக்கு திரும்பினர்.






      Dinamalar
      Follow us