/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சூலுார் தாலுகாவில் ஆறு இடங்களில் மழை மானி நிறுவ திட்டம்
/
சூலுார் தாலுகாவில் ஆறு இடங்களில் மழை மானி நிறுவ திட்டம்
சூலுார் தாலுகாவில் ஆறு இடங்களில் மழை மானி நிறுவ திட்டம்
சூலுார் தாலுகாவில் ஆறு இடங்களில் மழை மானி நிறுவ திட்டம்
ADDED : மே 23, 2024 11:09 PM
சூலுார்:சூலுார் தாலுகாவில் ஆறு இடங்களில் தானியங்கி மழை மானி பொருத்த பணிகள் நடந்து வருகின்றன.
சூலுார் தாலுகாவில், சூலுார், கருமத்தம்பட்டி, செலக்கரச்சல், வாரப்பட்டி ஆகிய உள் வட்டங்கள் உள்ளன. 100 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
சூலுார் தாலுகாவில் மழை பெய்தால், சூலுாரில் உள்ள பழைய சார் பதிவாளர் அலுவலகம், வாரப்பட்டியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள மழை மானிகள் மூலம் மழையளவு கணக்கிடப்பட்டு வருகிறது. மேலும், அரசூர் கிராமத்தில் தனியார் பராமரிப்பில் ஒரு மழை மானி உள்ளது.
தாலுகாவில், கூடுதலாக மழை மானிகளை நிறுவ வேண்டும் விவசாயிகள் மற்றும் தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், பேரிடர் மேலாண்மை துறை சார்பில், சூலுார் தாலுகாவில் ஆறு இடங்களில் தானியங்கி மழை மானிகள் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் கூறுகையில்,சூலுார் தாலுகாவில், தாலுகா அலுவலகம், அரசூர், செலக்கரச்சல் மற்றும் போகம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்கள்,, வாரப்பட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகம், சோமனூர் நகராட்சி அலுவலகம் ஆகிய ஆறு இடங்களில் தானியங்கி மழை மானி நிறுவதிட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கான முதல்கட்ட பணிகள் நடக்கின்றன. மழை மானிகள் வந்தவுடன் அவற்றை பொருத்தும் பணிகள் துவங்கும்,' என்றனர்.