ADDED : ஜூன் 05, 2024 08:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: தேசிய நெடுஞ்சாலையில் உடுமலை - பழநி ரோட்டில், சாலை விரிவாக்கப்பணிகள் நடந்தன. பணிகளின் போது வெஞ்சமடையில் இருந்த நிழற்கூரை அகற்றப்பட்டது. பணிகள் முடிந்த பின் நிழற்கூரை அமைக்கப்படவில்லை.
இதனால், அந்த பஸ் நிறுத்தத்தில், பயணியர் நீண்ட நேரம் வெயிலிலும், மழையிலும் காத்திருக்க வேண்டியதுள்ளது.
எனவே, நெடுஞ்சாலைத்துறையினர் வெஞ்சமடையில் நிழற்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.