sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தனி நபர் இல்லங்களில் பராமரிக்கும் சிறந்த நுாலகத்துக்கு காத்திருக்கு பரிசு  

/

தனி நபர் இல்லங்களில் பராமரிக்கும் சிறந்த நுாலகத்துக்கு காத்திருக்கு பரிசு  

தனி நபர் இல்லங்களில் பராமரிக்கும் சிறந்த நுாலகத்துக்கு காத்திருக்கு பரிசு  

தனி நபர் இல்லங்களில் பராமரிக்கும் சிறந்த நுாலகத்துக்கு காத்திருக்கு பரிசு  


ADDED : ஆக 30, 2024 10:17 PM

Google News

ADDED : ஆக 30, 2024 10:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:கோவை மாவட்டத்தில், தனி நபர் இல்லங்களில் பராமரிக்கப்படும் நுாலகத்துக்கு பரிசு வழங்கப்படும். அதற்கு விண்ணப்பிக்க, மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்திருக்கிறது.

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வீடுதோறும் நுாலகங்களை சிறப்பாக பயன்படுத்தி வரும் தீவிர வாசகர்களை கண்டறிந்து சொந்த நுாலகங்களுக்கு விருது வழங்கப்படும் என, தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் அறிவித்திருந்தார். கோவையில் தனிநபர் இல்லங்களில் பராமரிக்கப்படும் நுாலகங்களில், மாவட்ட அளவில் சிறப்பாக பராமரிக்கப்படும் ஒரு நுாலகத்தை தேர்ந்தெடுத்து, ரூ.3,000 மதிப்பில் விருது, கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்படும்.

தங்களது இல்லத்தில் நுாலகம் அமைத்து பராமரித்து வரும் புத்தக ஆர்வலர்கள், தங்களது நுாலகத்தில் உள்ள நுால்களின் எண்ணிக்கை, எந்தெந்த வகையான நுால்கள் மற்றும் அரிய நுால்கள் ஏதேனும் இருப்பின் அதைபற்றிய விபரம், எந்த ஆண்டு முதல் பராமரிக்கப்படுகிறது என்கிற விபரம், தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண்ணுடன், செப்., 30க்குள் மாவட்ட நுாலக அலுவலருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

மாவட்ட நுாலக அலுவலர், 1232 பெரிய கடை வீதி, கோவை-1 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ அல்லது, dlocbe1@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது, அருகாமையில் உள்ள பொது நுாலக இயக்கக நுாலகத்தில் நேரில் விண்ணப்பம் கொடுக்கலாம் என, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us