sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பதக்கங்களுடன் கால் பதித்த ஆஷ்ரம் ;மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

/

பதக்கங்களுடன் கால் பதித்த ஆஷ்ரம் ;மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

பதக்கங்களுடன் கால் பதித்த ஆஷ்ரம் ;மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

பதக்கங்களுடன் கால் பதித்த ஆஷ்ரம் ;மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு


ADDED : செப் 09, 2024 12:53 AM

Google News

ADDED : செப் 09, 2024 12:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் உள்ளிட்ட பிரிவுகளில் நடந்த போட்டிகளில் இந்திய அணி சார்பாக கோவையை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்று, பெருமை சேர்த்துள்ளனர்.

பீகார் உட்பட பல்வேறு மாநிலங்களில் ஒற்றை கம்பு வீச்சு, இரட்டைக் கம்பு வீச்சு, வாள் வீச்சு, சிலம்பு சண்டை, அலங்கார வரிசை, மான் கொம்பு, வேல் கம்பு போன்ற பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.

இதில், கோவைப்புதுாரில் உள்ள ஆஷ்ரம் பள்ளியில் இருந்து பங்கேற்ற, 10 மாணவர்களும், 20 பதக்கங்கள் பெற்று பெருமை சேர்த்துள்ளனர். இதில், 12 தங்கம், இரண்டு வெள்ளி, ஆறு வெண்கலம் என, 20 பதக்கங்கள் பெற்று கோவை திரும்பிய மாணவர்களுக்கு, பள்ளி வளாகத்தில் மேள, தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பள்ளி தாளாளர் தேவேந்திரன், செயலாளர் ரவிக்குமார், நிர்வாகி உதயேந்திரன், வித்யாஸ்ரம் பள்ளியின் இயக்குனர் சவுந்தர்யா, ஆஷ்ரம் பள்ளி முதல்வர் சரண்யா, சிலம்பம் பயிற்சியாளர் பவித்ரா பிரியதர்ஷினி ஆகியோர் கலந்து கொண்டனர்.

வெற்றி வாகை சூடி வந்த வீரர், வீராங்கனைகளை பள்ளி ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

தொடர்ந்து, மாணவ, மாணவியருக்கு சந்தன மாலைகள், சால்வை அணிவித்தும் இனிப்புகள் வழங்கியும், தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் தங்களது ஆற்றல் மிகு சிலம்பத்திறனை தங்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில், நிகழ்த்திக் காட்டினர்.






      Dinamalar
      Follow us