sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சென்னையில் இருந்து கோவைக்கு    பஸ்சில் பயணித்த இளம்பெண் பலி

/

சென்னையில் இருந்து கோவைக்கு    பஸ்சில் பயணித்த இளம்பெண் பலி

சென்னையில் இருந்து கோவைக்கு    பஸ்சில் பயணித்த இளம்பெண் பலி

சென்னையில் இருந்து கோவைக்கு    பஸ்சில் பயணித்த இளம்பெண் பலி


ADDED : மே 16, 2024 02:44 AM

Google News

ADDED : மே 16, 2024 02:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:சென்னையில் இருந்து கோவைக்கு பஸ்சில் பயணித்த இளம்பெண் பலியானார்.

கோவை மதுக்கரை அடுத்த பாலத்துறை பகுதியை சேர்ந்த கார்மேகம் என்பவரது மகள் மகாலட்சுமி, 23; சென்னையில் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல்நிலை சரி இல்லாமல் அவதி அடைந்து வந்தார். இதனால் அவர் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து தனியார் ஆம்னி பஸ்சில் கோவை திரும்பினார்.

பஸ்சில் கீழ் படுக்கையில் பயணம் செய்த மகாலட்சுமி நேற்று காலை கோவை காந்திபுரம் வந்து நின்றும் இறங்கவில்லை.

இதனால் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் அவரிடம் காந்திபுரம் வந்த தகவலை கூறினர். அவர் எழும்பாததால் சந்தேகமடைந்து, 108 ஆம்புலன்சிற்கு தகவலளித்தனர்.

அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மகாலட்சுமியை பரிசோதித்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்தது விட்டதாக தெரிவித்தனர்.

தொடர்ந்து தகவலறிந்து வந்த காட்டூர் போலீசார் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் விசாரணை நடத்தினர். பின், உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us