ADDED : ஜூலை 30, 2024 12:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
- நிருபர் குழு -
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், ஆடி கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், 24ம் ஆண்டு ஆடி கார்த்திகை அபிேஷக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று காலை சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து மாலையில் முருகப்பெருமான் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
* குரும்பபாளையம் அமணீஸ்வரர் கோவிலில் ஆடி கார்த்திகையை முன்னிட்டு, முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.