sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோவில் அருகில் ஆவின் டீக்கடை; பக்தர்கள், குடியிருப்போர் எதிர்ப்பு 

/

கோவில் அருகில் ஆவின் டீக்கடை; பக்தர்கள், குடியிருப்போர் எதிர்ப்பு 

கோவில் அருகில் ஆவின் டீக்கடை; பக்தர்கள், குடியிருப்போர் எதிர்ப்பு 

கோவில் அருகில் ஆவின் டீக்கடை; பக்தர்கள், குடியிருப்போர் எதிர்ப்பு 


ADDED : ஆக 22, 2024 12:40 AM

Google News

ADDED : ஆக 22, 2024 12:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறாக கோவில் அருகில் திறந்துள்ள ஆவின் டீக்கடையை அகற்ற, பக்தர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோடு கிழக்கு பாஷ்யகாரலு ரோடு கார்னரில், வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும், ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

பக்தர்கள் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில், பக்தர்களுக்கு இடையூறாக அங்கு ஆவின் டீக்கடை திறக்கப்பட்டுள்ளது. ஆவின் பாலகம் என்ற பெயரில் டீ, காபி, போண்டா, வடை மற்றும் பீடி சிகரெட் உட்பட அனைத்தும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆகவே, டீக்கடையை உடனே அகற்ற வேண்டும் என, பக்தர்களும், அந்த வீதியில் குடியிருப்பவர்களும் புகார் தெரிவித்துள்ளனர்.

கோவில் நிர்வாகிகள் கூறுகையில், 'இந்த டீக்கடைக்காரர் முன்பு, இந்த கோவிலுக்கு எதிரில் டீக்கடை வைத்து இருந்தார். போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்ததால், மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டு, கடையை அகற்றினார்.

ஆறு மாதங்களுக்கு முன், மீண்டும் இங்கு வந்து கடை போட்டார். நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து, மாநகராட்சி கமிஷனர் மற்றும் ஆர்.எஸ்.புரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தோம். அதனால் கடையை திறக்கவில்லை.

இப்போது, அரசியல்வாதிகள் உதவியுடன் டீக்கடையை திறந்துள்ளனர். இக்கடை மிகவும் இடையூறாக உள்ளதால், உடனே அகற்ற வேண்டும்' என்றனர்.






      Dinamalar
      Follow us