sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அஞ்சலகத்தில் விபத்து காப்பீடு; வாடிக்கையாளர்கள் ஆர்வம்

/

அஞ்சலகத்தில் விபத்து காப்பீடு; வாடிக்கையாளர்கள் ஆர்வம்

அஞ்சலகத்தில் விபத்து காப்பீடு; வாடிக்கையாளர்கள் ஆர்வம்

அஞ்சலகத்தில் விபத்து காப்பீடு; வாடிக்கையாளர்கள் ஆர்வம்


ADDED : மார் 04, 2025 06:08 AM

Google News

ADDED : மார் 04, 2025 06:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை; அஞ்சலகங்களில் விபத்து காப்பீடு திட்டத்தில் சேர வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அஞ்சலகங்களில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பயன்பெறும் வகையில், மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தங்கமகள் சேமிப்பு திட்டம், இன்சூரன்ஸ், விபத்து காப்பீடு, நிரந்த சேமிப்பு, இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இதனால், அஞ்சலகங்களை வாடிக்கையாளர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பணிபுரியும் இடம், வீடுகளில், எதிர்பாராத விதமாக ஏற்படும் விபத்துகளின் போது, காப்பீடு தொகை பெறும் திட்டத்தை துவங்கியுள்ளது. இந்த திட்டத்தில், 18 வயது முதல், 65 வயதுக்கு உட்பட்டவர்கள் இணைந்து கொள்ளலாம்.

வால்பாறை போஸ்ட் மாஸ்டர் கீதாஞ்சலி கூறுகையில், ''விபத்து காப்பீடு திட்டத்தில் இணைய ஆதார் எண், மொபைல்போன் எண், வாரிசுதாரர் (நாமினி) ஆகிய விபரங்களை கொண்டுவர வேண்டும்.

இந்த காப்பீட்டு திட்டத்தில், 320 ரூபாய் செலுத்தினால், 5 லட்சம் ரூபாய்; 559 ரூபாய் செலுத்தினால் 10 லட்சம்; 799 ரூபாய் செலுத்தினால், 15 லட்சம் என்ற வகையில், விபத்து காப்பீடு பிரிமியம் தொகை செலுத்தி, இந்த திட்டத்தில் இணையலாம்,'' என்றார்.






      Dinamalar
      Follow us