sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மேட்டுப்பாளையம் - குன்னுார் சாலையில் வாகன வேகம் கட்டுப்படுத்த நடவடிக்கை

/

மேட்டுப்பாளையம் - குன்னுார் சாலையில் வாகன வேகம் கட்டுப்படுத்த நடவடிக்கை

மேட்டுப்பாளையம் - குன்னுார் சாலையில் வாகன வேகம் கட்டுப்படுத்த நடவடிக்கை

மேட்டுப்பாளையம் - குன்னுார் சாலையில் வாகன வேகம் கட்டுப்படுத்த நடவடிக்கை


ADDED : ஜூலை 15, 2024 02:29 AM

Google News

ADDED : ஜூலை 15, 2024 02:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் - குன்னுார் சாலையில், கல்லார் அருகே வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஊட்டி மற்றும் கர்நாடக, கேரளா மாநிலங்களுக்கு செல்வதற்கு மேட்டுப்பாளையம்--குன்னுார் சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்தச் சாலையில் 24 மணி நேரமும் போக்குவரத்துஉள்ளது.

மேட்டுப்பாளையம் பவானி ஆற்று பாலம் முதல் கல்லார் வரை சாலைகள் நேராக செல்வதாலும், கொண்டை ஊசி வளைவுகள் இல்லாததாலும், அங்கு வாகனங்கள் மிகவும் வேகமாக செல்கின்றன. இச்சாலையின் இருபுறங்களிலும் அடர்ந்தவனப்பகுதி உள்ளது. இதனால் வனவிலங்குகள் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் இங்கு உலா வருகின்றன. இதில் கல்லார் பகுதி யானைகள் வழித்தடமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சாலையில் ஓடந்துறை செக்போஸ்ட் முதல் கல்லார் வனச்சோதனை சாவடி வரை யானைகள், மான் நடமாட்டம் அதிகம் இருக்கும். வனவிலங்குகள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி, பவானி ஆற்று பாலம் முதல் கல்லார் வரையிலான சாலையில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த நெடுஞ்சாலையினர் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து கோவை தேசிய நெடுஞ்சாலை உதவி கோட்டப் பொறியாளர் முரளிகுமார் கூறுகையில், ''மேட்டுப்பாளையம் - குன்னுார் சாலையில், யானைகளின் வழித்தடமாக கருத்தப்படும் துாரிபாலம் முதல் கல்லார் வரையிலான சாலையில் ஒளிரும் விளக்குகள், பேரிகார்டு அமைத்தல் மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை குறித்து முழுமையாக ஆய்வு மேற்கொள்ள உள்ளோம்.

இதனால் வாகன ஓட்டிகளும், வனவிலங்குகளும் விபத்தில் சிக்கும் அபாயம் குறையும். இதற்கான பணிகள் விரைவில் துவங்கும்,'' என்றார்.-----






      Dinamalar
      Follow us