/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உறிஞ்சி கிணற்றில் சேர் புகுந்தது
/
உறிஞ்சி கிணற்றில் சேர் புகுந்தது
ADDED : ஜூலை 16, 2024 11:20 PM
மேட்டுப்பாளையம்;பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கால் சாமன்னா நீரேற்று நிலையத்தில், உள்ள உறிஞ்சி கிணற்றில் சேர் புகுந்தது. சேரை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் 20 ஆயிரம் குடும்பங்கள் என சுமார் 80 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் நகரத்திற்கு, மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் பவானி ஆற்றிலிருந்து தினசரி சுமார் 14 எம்.எல்.டி. வரை தண்ணீர் எடுத்து, சாமன்னா தலைமை நீரேற்று நிலையத்தில் சுத்திகரிப்பு செய்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இதனிடையே பில்லூர் அணை நிரம்பி, பவானி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சாமன்னா நீரேற்று நிலையத்தில் உள்ள உறிஞ்சி கிணற்றில் சேர் புகுந்தது. இதனால் தண்ணீர் எடுக்க முடியாமல் உள்ளது. தற்போது சேரை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் மேட்டுப்பாளையம் நகராட்சியில் உள்ள சில பகுதிகளுக்கு இரண்டு நாட்கள் குடிநீர் விநியோகம் தடைப்படும் அபாயம் உள்ளது.
இது குறித்து மேட்டுப்பாளையம் நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், உறிஞ்சி கிணற்றில் உள்ள சேரை அகற்றும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. ஓரிரு நாட்களில் சேர் முழுமையாக அகற்றப்படும். சேர் அகற்றினால் மட்டுமே குடிநீர் விநியோகத்திற்கு தண்ணீர் எடுக்க முடியும்,என்றனர்.
---
படம் புட்நோட்- சாமன்னா நீரேற்று நிலைய உறிஞ்சி கிணற்றில் இருந்து சேர் அகற்றப்பட்டு வருகிறது.
---