sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

காய்கறி சாகுபடி செய்வதற்கு ஆடிப்பட்டம் கைகொடுக்கும்

/

காய்கறி சாகுபடி செய்வதற்கு ஆடிப்பட்டம் கைகொடுக்கும்

காய்கறி சாகுபடி செய்வதற்கு ஆடிப்பட்டம் கைகொடுக்கும்

காய்கறி சாகுபடி செய்வதற்கு ஆடிப்பட்டம் கைகொடுக்கும்


ADDED : ஜூன் 21, 2024 11:53 PM

Google News

ADDED : ஜூன் 21, 2024 11:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு;ஆடி பட்டம் துவங்க உள்ளதால், காய்கறி பயிர்களை விவசாயம் செய்ய ஏற்ற தருணம் என இயற்கை விவசாயி மாரிமுத்து தெரிவித்தார்.

கிணத்துக்கடவு வட்டாரத்தில் பெரும்பாலும் தென்னை விவசாயமே அதிக அளவில் உள்ளது. இதற்கு அடுத்த படியாக, காய்கறிகள் சாகுபடி உள்ளது. தற்போது தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளது. ஆடிப்பட்டம் துவங்க இன்னும் இரண்டு வாரங்களே உள்ளதால், விவசாயிகள் தங்கள் நிலத்தில், வெண்டைக்காய், கத்தரிக்காய், அவரைக் காய், பச்சைமிளகாய், தக்காளி, பீர்க்கங்காய், சுரைக்காய் போன்றவைகளை பயிர் செய்யலாம்.

தென்மேற்கு பருவமழை காலத்தில், குளிர்ந்த காற்று வீசும் போது மண்ணில் ஈரப்பதம் காணப்படும். இதனால் காய்கள் நன்கு வளரும். மேலும், ஐந்தடுக்கு பயிர் முறையை பின்பற்றும் போது நோய் மற்றும் பூச்சி தாக்குதல் குறைந்த அளவே இருக்கும்.

இந்த காலகட்டத்தில் காய்கறிகளை வீட்டு தோட்டம் மற்றும் மாடித்தோட்டங்களிலும் பயிர் செய்யலாம், என, இயற்கை விவசாயி மாரிமுத்து தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us