sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வாழையில் இலை நோய் கட்டுப்படுத்த அறிவுரை

/

வாழையில் இலை நோய் கட்டுப்படுத்த அறிவுரை

வாழையில் இலை நோய் கட்டுப்படுத்த அறிவுரை

வாழையில் இலை நோய் கட்டுப்படுத்த அறிவுரை


ADDED : ஆக 20, 2024 10:20 PM

Google News

ADDED : ஆக 20, 2024 10:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு : வாழை இலையில் மஞ்சள் தன்மை மற்றும் இலை கருகல் நோய்க்கு தமிழ்நாடு வேளாண் பல்கலை பேராசிரியர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

கிணத்துக்கடவு பகுதியில், தென்னையில் ஊடுபயிராகவும், தனிப்பயிராகவும், நேந்திரன், கதளி, பூவன், ரஸ்தாலி ரக வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சில இடங்களில் வாழை இலை கருகியும், மஞ்சள் நிறமாகவும் காணப்படுகிறது. இதை கட்டுப்படுத்த தமிழ்நாடு வேளாண் பல்கலை பேராசிரியர் ஆனந்தராஜா ஆலோசனை வழங்கியுள்ளார்.

அவர் கூறுகையில், வாழையில் சாம்பல் சத்து, தழைச்சத்து, நுண்ணூட்டச்சத்து மற்றும் இதர ஊட்டச்சத்து குறைவால், வாழை இலையில் மஞ்சள் நிறம் மற்றும் கருகல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க வாழைக்கு நல்ல சத்தான உரம் அளிக்க வேண்டும்.

முதல் மாதத்தில், சூப்பர் பாஸ்பேட், மக்கிய தொழு உரம் இட வேண்டும். இரண்டாவது மாதத்தில் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா உரங்கள் இட வேண்டும். இதே போன்று வாழை நுண்ணூட்டமான 'வாழை சக்தி' கொடுக்க வேண்டும். இவ்வாறு, உர மேலாண்மையை கடைபிடித்தால் இலை கருகல் மற்றும் மஞ்சள் நோய் ஏற்படுவதை தடுக்க முடியும், என்றார்.






      Dinamalar
      Follow us