sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சிறுதானிய சாகுபடியை அதிகரிக்க 1.48 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

/

சிறுதானிய சாகுபடியை அதிகரிக்க 1.48 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

சிறுதானிய சாகுபடியை அதிகரிக்க 1.48 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

சிறுதானிய சாகுபடியை அதிகரிக்க 1.48 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு


ADDED : மே 30, 2024 05:02 AM

Google News

ADDED : மே 30, 2024 05:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோவை மாவட்டத்தில் சோளம், கம்பு, ராகி, திணை, சாமை, வரகு உள்ளிட்ட சிறுதானிய பயிர்கள் 75 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

சிறுதானிய சாகுபடியை ஊக்குவிக்க, உணவு மற்றும் ஊட்டச்சத்து இயக்க திட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்துக்கு ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஊட்டச்சத்துள்ள சிறுதானியங்களை அதிகம் உற்பத்தி செய்வது, இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

ஊட்டச்சத்துள்ள சிறுதானியங்கள் சாகுபடியை அதிகரிக்க, கோவை மாவட்டத்தில் மானியம் மற்றும் தொழில் நுட்ப உதவிகள், வட்டார வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் வழங்கப்படுகின்றன.

விவசாயிகள் இது குறித்த கூடுதல் விவரங்கள் பெற, வட்டார வேளாண் உதவி இயக்குனர்கள் அல்லது மாவட்ட உணவு மற்றும் ஊட்டச்சத்து இயக்க ஆலோசகர்களை, 99449 77561 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, வேளாண் இணை இயக்குனர் பெருமாள்சாமி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us