/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஈஷா மஹா சிவராத்திரி விழாவில் பங்கேற்க அமித்ஷா கோவை வருகை
/
ஈஷா மஹா சிவராத்திரி விழாவில் பங்கேற்க அமித்ஷா கோவை வருகை
ஈஷா மஹா சிவராத்திரி விழாவில் பங்கேற்க அமித்ஷா கோவை வருகை
ஈஷா மஹா சிவராத்திரி விழாவில் பங்கேற்க அமித்ஷா கோவை வருகை
ADDED : பிப் 26, 2025 01:59 AM

கோவை:ஈஷா சார்பில் நடக்கும் மஹா சிவராத்திரி விழாவில் பங்கேற்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்றிரவு 8:40 மணிக்கு, விமானத்தில் கோவை வந்தடைந்தார். அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
பா.ஜ., மேலிட பார்வையாளர் சுதாகர் ரெட்டி, மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர். விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்ட அமித்ஷாவுக்கு, பா.ஜ., தொண்டர்கள் மலர் துாவி, வரவேற்பு அளித்தனர். இன்று காலை பீளமேடு பகுதியில், புதிதாக கட்டப்பட்டுள்ள பா.ஜ., அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.
மதியம் பா.ஜ., நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார். இன்று மாலை, சாலை மார்க்கமாக ஈஷா யோகா மையத்தை சென்றடைகிறார். இரவு, ஈஷா மையத்தில் உள்ள விருந்தினர் மாளிகை செல்கிறார். நாளை காலை, ஈஷாவில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டரில் புறப்பட்டு, கோவை விமான நிலையம் சென்று, அங்கிருந்து தனி விமானத்தில் உத்தர பிரசேம் செல்கிறார்.
அமித்ஷா வருகையையொட்டி, கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநகரில் 3,000 போலீசார், மாவட்ட பகுதியில், 4,000 போலீசார் என மொத்தம் 7,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

