/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காமாட்சியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி நாளை அம்மன் திருவீதி உலா
/
காமாட்சியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி நாளை அம்மன் திருவீதி உலா
காமாட்சியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி நாளை அம்மன் திருவீதி உலா
காமாட்சியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி நாளை அம்மன் திருவீதி உலா
ADDED : ஏப் 21, 2024 11:58 PM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி, பாலமாணிக்கம் வீதியில் உள்ள காமாட்சியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா கோலாகலமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
நடப்பாண்டு விழா, நேற்று துவங்கிய நிலையில், வரும் 24ம் தேதி வரை நடக்கிறது. அதன்படி, நேற்று, காலை 8:30 மணிக்கு தெய்வக்குளம் காளியம்மன் கோவிலுக்குச்சென்று தீர்த்தம் கொண்டுவரப்பட்டது.
இரவு, 7:00 மணிக்கு, சக்தி கும்பஸ்தாபனம் செய்யப்பட்டது. இன்று, காலை, 7.00 மணி முதல் இரவு, 8.00 மணி வரை மாவிளக்கு பொங்கல் சுவாமிக்கு சந்தனகாப்பு மற்றும் சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.
நாளை, காலை, 6:00 மணிக்கு, சுவாமிக்கு முத்தங்கி அலங்காரமும், காலை 9:00 மணிக்கு, காமாட்சியம்மனுக்கும், ஏகாம்பரேஸ்வரருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
உற்சவத்தை தொடர்ந்து பங்கேற்கும் பக்தர்கள் மொய் சமர்ப்பிக்கும் நிகழ்வும் அதையடுத்து திருக்கல்யாண விருந்தும் நடைபெறுகிறது. இதில் அறுசுவை உணவுகள் பரிமாறப்படுகிறது.
மாலை, 6:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா நடக்கிறது. இதில், தவில் நாதஸ்வரம் மேளதாளங்களும் சிங்காரி மேளம் முழங்க, மயிலாட்டம், ஒயிலாட்டமும் வீதி உலாவில் இடம் பெறுகிறது.
இதையடுத்து இரவு, 8:00 மணிக்கு வானவேடிக்கையும் அம்மன் ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது. வரும், 24ம் தேதி காலை, 8:45 மணிக்கு மகா அபிஷேகம், பகல், 12:00 மணிக்கு வெள்ளி தங்க கவசத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வடை, பாயசத்தோடு மகா நெய்வேத்தியம் செய்து சுவாமிக்கு தீபாராதனை சமர்ப்பிக்கப்படுகிறது.

