sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பசுமை புரட்சி 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்துக்கு பாராட்டு

/

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பசுமை புரட்சி 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்துக்கு பாராட்டு

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பசுமை புரட்சி 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்துக்கு பாராட்டு

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பசுமை புரட்சி 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்துக்கு பாராட்டு


ADDED : ஜூலை 19, 2024 01:37 AM

Google News

ADDED : ஜூலை 19, 2024 01:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது நிருபர் -

அமெரிக்காவில் இருந்து வந்திருந்த ஈரோட்டை சேர்ந்த மாணவர், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில் மரம் வளர்ப்பு குறித்து கேள்விப்பட்டு, மரம் வளர்ப்பு தொழில்நுட்பத்தை வெகுவாக பாராட்டியுள்ளார்.

'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தின் வாயிலாக, பயனுள்ள வகையில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்படுகிறது.திருப்பூர் மாவட்டத்தில், 2015ம் ஆண்டு முதல் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது; இதுவரை, 18 லட்சம் மரக்கன்றுகள் நட்டு, மரமாக வளர்க்கப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டில், மூன்று லட்சம் மரக்கன்று நட்டு வளர்க்கும் திட்ட பணி துவங்கியுள்ளது.

ஈரோடு மாவட்டம் இடையன்காட்டு வலசுவை சேர்ந்த தம்பதியர் ரவிக்குமார் - மோகனசுந்தரி. இவர்களின் மகன் நிதின், அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டனர். சொந்த ஊர் வந்திருந்த நிதின், 'வனத்துக்குள் திருப்பூர்' என்ற திட்டத்தில் மரம் வளர்ப்பது குறித்து கேள்விப்பட்டுள்ளார்.

அதன்படி, உடுமலை பகுதிகளுக்கு சென்று, திட்ட பணியாளர்களை சந்தித்த, மரம் வளர்ப்பு குறித்து கேட்டறிந்துள்ளார்.

தொடர்ச்சியாக, 15 இடங்களில் வளர்க்கும் மரங்களை நேரில் பார்த்தார்; போத்த நாயக்கனுாரில், ராஜூலட்சுமி என்பவர் நிலத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் பங்கேற்று, புதிய மரக்கன்றுகளை நட்டு வைத்து, மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்.

இதுகுறித்து நிதின் கூறுகையில்,''வெற்றி அமைப்பின் வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் மரம் வளர்ப்பது குறித்து கேட்டறிந்து, மூன்று நாட்கள், பல்வேறு இடங்களில் சுற்றிப்பார்த்தேன். மரக்கன்று உருவாக்குவது, நிலம் தேர்வு செய்வது, இலவசமாக நட்டு கொடுப்பது, அரசு சார் துறைகளுடன் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்துவது பிரமிப்பாக இருக்கிறது. உலக நாடுகள், மரம் வளர்ப்பை ஊக்குவித்து வருகின்றன. எதிர்கால சந்ததியினருக்காக, வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் மரக்கன்று நட்டு வளர்த்து பசுமை புரட்சி செய்து வருவது பாராட்டுக்குரியது,'' என்றார்.

பசுமை விழிப்புணர்வும் முக்கியம்

இதுகுறித்து, வெற்றி அமைப்பின் தலைவர் சிவராம் கூறியதாவது:மரம் வளர்ப்பு எவ்வளவு முக்கியமோ விழிப்புணர்வும் அந்த அளவுக்கு அவசியம். நாம் 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதால், அமெரிக்காவில் இருக்கும் தமிழர் குடும்பம் பார்த்து, திருப்பூர் மாவட்டத்துக்கு வந்து பார்த்துள்ளது.அமெரிக்காவில் படிக்கும் நிதின் என்ற மாணவர், பணிகளை பார்த்து வியந்து பாராட்டியுள்ளார். அவர் வாயிலாக, அமெரிக்காவிலும், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படும். சிறிய விதை, பலரது உழைப்பால் மரமாக வளரும் படிநிலைகளை கண்டு வியந்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us