/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'நாங்க ஹிந்து இல்லையா!' செல்வப்பெருந்தகை கேள்வி
/
'நாங்க ஹிந்து இல்லையா!' செல்வப்பெருந்தகை கேள்வி
ADDED : ஏப் 07, 2024 12:51 AM

பொள்ளாச்சி தி.மு.க., வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து, காங்., மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது:
பா.ஜ.,வினர் ஹிந்து எனக்கூறி வருகின்றனர்; நாங்க ஹிந்து இல்லையா. மகாத்மா காந்தி ராமபிரானின் பக்தர்; இறக்கும் போது கூட, ராமா ராமா எனக்கூறினார். ஹிந்து எனக்கூறி பிரிவினையை ஏன் உருவாக்க வேண்டும். தமிழக முதல்வர் கொடுத்த வாக்குறுதிகளில், 80 சதவீதத்தை நிறைவேற்றியுள்ளார். தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக உள்ளது.
இவ்வாறு, அவர் பேசினார்.
அதன்பின், நிருபர்களிடம் கூறுகையில், ''தகவல் அறியும் உரிமை சட்டத்தில், தகவல் கேட்டதும் அண்ணாமலைக்கு ஏழு நாளில் தகவல் கிடைக்கிறது. நாம் விண்ணப்பித்தால் ஒரு மாதமாகும். கடந்த, 50 ஆண்டுகளாக கச்சத்தீவு பிரச்னையை பேசிகிட்டு தான் இருக்கின்றனர். மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர். அவரை பற்றி பேச யாருக்கும் அருகதை இல்லை,'' என்றார்.

