sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வயநாடு நிலைமை தமிழகத்துக்கு வராமலிருக்க ஏற்பாடு: முத்துசாமி

/

வயநாடு நிலைமை தமிழகத்துக்கு வராமலிருக்க ஏற்பாடு: முத்துசாமி

வயநாடு நிலைமை தமிழகத்துக்கு வராமலிருக்க ஏற்பாடு: முத்துசாமி

வயநாடு நிலைமை தமிழகத்துக்கு வராமலிருக்க ஏற்பாடு: முத்துசாமி


ADDED : ஆக 06, 2024 12:19 AM

Google News

ADDED : ஆக 06, 2024 12:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:கோவையில் யானை தாக்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஸ்கர் என்பவருக்கு நிவாரண உதவி வழங்க, தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி நேரில் வந்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

யானை வழித்தடத்தில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம். யானை - மனித மோதல்களை தடுக்க, அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். வனப்பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்ற, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விரைவில் கோவை, ஈரோடு பகுதியில் யானை - மனித மோதல்களை தடுக்க வனத்துறை அதிகாரிகளுடன், ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது.

நிலச்சரிவு நடந்த, வயநாடு பகுதியில் நிலைமை சரியான பின், தமிழகத்திலிருந்து டெக்னிக்கல் துறை சார்ந்த அதிகாரிகள் அங்கு சென்று, எதனால் நிலச்சரிவு ஏற்பட்டது என ஆராய இருக்கின்றனர்.

வயநாடு சம்பவத்தை உதாரணமாக கொண்டு யானை வழித்தடங்கள், நிலச்சரிவு பாதிக்கும் இடங்களை ஆராய்ந்து, தமிழகத்தில் இது போன்ற சம்பவம் நடைபெறாமல், மக்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us