/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஹோட்டல் 'பப்' சென்றவர் மீது தாக்குதல்; ஐந்து பேர் மீது போலீசார் வழக்கு பதிவு
/
ஹோட்டல் 'பப்' சென்றவர் மீது தாக்குதல்; ஐந்து பேர் மீது போலீசார் வழக்கு பதிவு
ஹோட்டல் 'பப்' சென்றவர் மீது தாக்குதல்; ஐந்து பேர் மீது போலீசார் வழக்கு பதிவு
ஹோட்டல் 'பப்' சென்றவர் மீது தாக்குதல்; ஐந்து பேர் மீது போலீசார் வழக்கு பதிவு
ADDED : ஆக 14, 2024 09:03 PM
கோவை : காந்திபுரம் அருகே தனது நண்பருடன் 'பப்' சென்றவர் மீது, ஹோட்டல் ஊழியர்கள் தாக்குதல் நடத்தியது தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.
ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் பாலஹரி விக்னேஷ்,22. இவர் கடந்த, 11ம் தேதி இரவு, 8:30 மணிக்கு காந்திபுரத்தில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு தனது நண்பர் அபிலேஷ் உடன் 'பப்'புக்கு சென்றார். மதுபோதையில் இருவரும் நடனம் ஆடிக்கொண்டிருந்தபோது, அங்கிருந்த நபர் ஒருவர் பாலஹரி விக்னேஷிடம் தகராறு செய்துள்ளார்.
ஹோட்டல் பாதுகாவலர்கள், பாலஹரி விக்னேஷ் மற்றும் அவரது நண்பர் அபிலேஷ் ஆகியோரை அங்கிருந்து வெளியேற்றி, வாகன நிறுத்தத்துக்கு அழைத்து சென்றனர். ஹோட்டல் பாதுகாவலர்களின் மேலாளரான ராஜேஷ் கண்ணன் மற்றும் பாதுகாவலர்கள் அரவிந்த், ராஜா, சிவா, மணி உட்பட ஐந்து பேர் அங்கு வந்தனர்.
பாலஹரி விக்னேஷ் மற்றும் அபிலேஷ் ஆகியோரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், கைகளாலும் தாக்கியுள்ளனர். பாதுகாவலர்களில் ஒருவர், பாலஹரி விக்னேஷின் கால் மற்றும் கையில் மரக்கட்டையால் தாக்கியுள்ளார்.
காயமடைந்த அவர், கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில், ஹோட்டல் பாதுகாவலர்களின் மேலாளரான ராஜேஷ் கண்ணன் உட்பட, ஐந்து பேர் மீது வழக்கு பதிந்து காட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.