sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அரசு பஸ்களில் 'ஸ்டிக்கர்' ஓட்டி மக்களிடம் விழிப்புணர்வு

/

அரசு பஸ்களில் 'ஸ்டிக்கர்' ஓட்டி மக்களிடம் விழிப்புணர்வு

அரசு பஸ்களில் 'ஸ்டிக்கர்' ஓட்டி மக்களிடம் விழிப்புணர்வு

அரசு பஸ்களில் 'ஸ்டிக்கர்' ஓட்டி மக்களிடம் விழிப்புணர்வு


ADDED : மார் 28, 2024 10:46 PM

Google News

ADDED : மார் 28, 2024 10:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அரசு பஸ்களில், 'ஸ்டிக்கர்' ஓட்டி, 100 சதவீதம் ஓட்டளிப்போம் என பொதுமக்களிடம் வலியுறுத்தப்பட்டது.

பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் வருவாய்துறை சார்பில், லோக்சபா தேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி, பஸ் ஸ்டாண்டில் நடந்தது.

சப் - கலெக்டர் கேத்திரின் சரண்யா, பஸ்களில், ஸ்டிக்கர்களை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன. வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜ், மோட்டார் வாகன ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன், வருவாய்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

அதிகாரிகள் கூறியதாவது: லோக்சபா தேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.பொதுமக்கள் கூடும் இடங்கள், கடைகள் முன்பாக, விழிப்புணர்வு பிளக்ஸ்கள் வைக்கப்பட்டுள்ளன.

கடைகளில், வழங்கப்படும் பில்களிலும், ஓட்டு அளிப்பதன் அவசியம் குறித்து வாசகங்கள் அச்சடிச்சு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஓட்டுக்கு பணம் வாங்க வேண்டாம்; ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என பொதுமக்களிடம் வலியுறுத்தப்படுகிறது. தொடர்ந்து, லோக்சபா தேர்தலில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, 100 சதவீதம் ஓட்டுப்பதிவாக முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us