/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
100 சதவீத ஓட்டுப்பதிவுக்கு மக்களிடையே விழிப்புணர்வு
/
100 சதவீத ஓட்டுப்பதிவுக்கு மக்களிடையே விழிப்புணர்வு
100 சதவீத ஓட்டுப்பதிவுக்கு மக்களிடையே விழிப்புணர்வு
100 சதவீத ஓட்டுப்பதிவுக்கு மக்களிடையே விழிப்புணர்வு
ADDED : ஏப் 05, 2024 10:54 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி, வால்பாறையில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் சார்பில், விழிப்புணர்வு பேரணி நடந்தது. முதற்கட்டமாக, மாற்றுத்திறனாளிகள் வாக்காளர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து, மூன்று சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடந்தது.
தேர்தல் நடத்தும் அலுவலர் ஷர்மிளா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கேத்திரின் சரண்யா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
மணக்கடவு வாணவராயர் வேளாண் கல்லுாரி நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள், வருவாய்துறை சார்பில், விழிப்புணர்வு பேரணி, வளந்தயாமரம் செக்போஸ்ட் பகுதியில் நடந்தது.
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் நிறைமதி, பேரணியை துவக்கி வைத்தார். தேர்தல் துணை தாசில்தார் செந்தில்குமார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
மேலும், ஓட்டு அளிப்பதன் அவசியம் குறித்து மாணவர்கள், நாடக வடிவில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

