sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அரசு பள்ளியில் சேர்க்க விழிப்புணர்வு ஊர்வலம்

/

அரசு பள்ளியில் சேர்க்க விழிப்புணர்வு ஊர்வலம்

அரசு பள்ளியில் சேர்க்க விழிப்புணர்வு ஊர்வலம்

அரசு பள்ளியில் சேர்க்க விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : மார் 21, 2024 11:03 AM

Google News

ADDED : மார் 21, 2024 11:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, வெள்ளாளபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமையாசிரியர் ரஷியாபீபி தலைமை வகித்தார். ஊராட்சித் தலைவர் செந்தில்குமார் பங்கேற்றார். பள்ளி, மாணவ, மாணவியர் நாடகம், நடனம் வாயிலாக அரசு பள்ளிகளில் இட ஒதுக்கீடு, படித்த முடித்தபின் வேலைவாய்ப்பு, அரசின் திட்டங்கள் குறித்து விளக்கினர்.

மேலும், 2024-25ம் கல்வியாண்டு, முதலாம் வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு மாலை மற்றும் கிரீடம் அணிவித்தும், பொன்னாடை போர்த்தியும் வாழ்த்து தெரிவித்தனர். ஆசிரியர்கள், மாணவர்கள் ஒன்றிணைந்து, கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்றனர்.

அப்போது, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என, துண்டுப்பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கவுன்சிலர்கள் சுப்ரமணியம், அருண்பிரசாத், ஆசிரியர்கள் சித்ரா, அம்சவேணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us