sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பழைய ஆயக்கட்டுக்கு நீர் திறப்பு ஆழியாறு விவசாயிகள் மகிழ்ச்சி

/

பழைய ஆயக்கட்டுக்கு நீர் திறப்பு ஆழியாறு விவசாயிகள் மகிழ்ச்சி

பழைய ஆயக்கட்டுக்கு நீர் திறப்பு ஆழியாறு விவசாயிகள் மகிழ்ச்சி

பழைய ஆயக்கட்டுக்கு நீர் திறப்பு ஆழியாறு விவசாயிகள் மகிழ்ச்சி


ADDED : ஜூன் 08, 2024 12:24 AM

Google News

ADDED : ஜூன் 08, 2024 12:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு வரும், 10ம் தேதி முதல் அக்., 24ம் தேதி வரை, தண்ணீர் திறக்கப்படவுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பொள்ளாச்சி அருகே, ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசனத்தில், 6,400 ஏக்கர் நிலங்கள் உள்ளன. ஆழியாறு அணையில் இருந்து, பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு, காரப்பட்டி, அரியாபுரம், பள்ளிவளங்கன், வடக்கலுார், பெரியணை மற்றும் அம்மன் கால்வாய் வழியாக நீர் வினியோகிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் இருபோக சாகுபடிக்கு தண்ணீர் வினியோகிக்கப்பட்டது.

கடந்தாண்டு போதிய மழை இல்லாததால், சாகுபடிக்கு தண்ணீர் வழங்கப்படாமல், நிலை பயிர்களை காப்பாற்ற மட்டும் தண்ணீர் வழங்கப்பட்டது.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, நீர்வளத்துறை அதிகாரிகள், தண்ணீர் திறக்க அரசுக்கு கருத்துரு அனுப்பினர். ஜூன் 1ம் தேதி முதல் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதற்கான அறிவிப்பு வெளியாகும் என, விவசாயிகள் காத்திருந்தனர்.

இந்நிலையில், வரும் 10ம் தேதி முதல் அக்., 24ம் தேதி வரை, தொடர்ந்து, 136 நாட்களுக்கு, 1,020 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்க, அரசின் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார். இதனால், பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us