sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஆழியாறு நீர்மட்டம் 110 அடியாக உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

/

ஆழியாறு நீர்மட்டம் 110 அடியாக உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

ஆழியாறு நீர்மட்டம் 110 அடியாக உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

ஆழியாறு நீர்மட்டம் 110 அடியாக உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

2


ADDED : ஜூலை 21, 2024 01:09 AM

Google News

ADDED : ஜூலை 21, 2024 01:09 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, ஆழியாறு அணை நீர் மட்டம், 110 அடியாக உயர்ந்ததையடுத்து, வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பி.ஏ.பி., பாசனத்தில், முக்கிய அணையான ஆழியாறு அணை, 3,864 மில்லியன் கனஅடி நீர்த்தேக்க கொள்ளளவு கொண்டது. மொத்தம், 120 அடி உயரமுள்ள ஆழியாறில், சேகரிக்கப்படும் தண்ணீர் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனம் மற்றும் குடிநீர், ஒப்பந்தப்படி கேரளாவுக்கு வினியோகிக்கப்படுகிறது.

கடந்தாண்டு பருவமழை கை கொடுக்காததால், அணை நிரம்பவில்லை. இந்தாண்டு, பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

கடந்த, ஒரு வாரமாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்தது. கடந்த, 16ம் தேதி 91 அடி நீர்மட்டம் உயர்ந்தது. 18ம் தேதி அணை நீர்மட்டம் 100 அடியை தொட்டது. மொத்தம் உள்ள, 120 அடியில், நேற்று காலை, 8:00 மணிக்கு, 109.30 அடியாக இருந்தது. மதியம், 2:00 மணிக்கு 110 அடியாக உயர்ந்தது. வினாடிக்கு, 2,624 கனஅடி நீர் வரத்து உள்ளது.

நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஆழியாறு அணையில், 120 அடியில், 110 அடியை நீர்மட்டம் எட்டியதைடுத்து, முதல்நிலை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தொடர்ந்து, கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அணை நீர்மட்டம், 115 அடியை தாண்டியதும், இரண்டாம் கட்ட மற்றும் இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும். 118 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்து, நீர்வரத்து அதிகம் இருந்தால், அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்படும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us