sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பச்சிளங்குழந்தைகளுக்கு குடிக்க தண்ணீர் கொடுக்கக் கூடாது!

/

பச்சிளங்குழந்தைகளுக்கு குடிக்க தண்ணீர் கொடுக்கக் கூடாது!

பச்சிளங்குழந்தைகளுக்கு குடிக்க தண்ணீர் கொடுக்கக் கூடாது!

பச்சிளங்குழந்தைகளுக்கு குடிக்க தண்ணீர் கொடுக்கக் கூடாது!


ADDED : ஏப் 29, 2024 11:49 PM

Google News

ADDED : ஏப் 29, 2024 11:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், பச்சிளங்குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுக்கலாமா? கூடாதா...?

'என்னங்க இது கேள்வி....இந்த வெயிலில் நமக்கே இவ்வளவு தாகம் எடுக்கிறதே. குழந்தைகள் எப்படி தாங்கும்...' என்ற சந்தேகம், ஒவ்வொருவருக்கும் எழும். சரி, தண்ணீர் கொடுக்கலாமா என்ற கேள்விக்கு என்ன பதில்?

''கண்டிப்பாக கொடுக்கக் கூடாது,'' என்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் மகேஷ்வரன்.

அவர் கூறியதாவது:

குழந்தை பிறந்து சில மாதங்கள் வரை குழந்தைகளுக்கு நீர் தேவைப்படாது. தாய்ப்பாலிலேயே குழந்தைக்குத் தேவையான வைட்டமின்கள், ஊட்டச்சத்துகள், கொழுப்புகள் இருப்பதால், குழந்தைகள் நல்ல ஊட்டத்துடன் வளர, தாய்ப்பால் மட்டுமே போதுமானது.

6 மாதங்களுக்கு மேல் உணவு கொடுக்கும்போது, சிறிதளவு நீர் கொடுக்கலாம். குழந்தைகளுக்குத் தண்ணீர் கொடுக்கும் முன், குழந்தைகள் நல மருத்துவரிடம் ஆலோசனை பெற்று கொடுப்பது அவசியம்.

பிறந்த குழந்தை முதல் 5 மாதங்களான குழந்தைகளுக்கு, கண்டிப்பாக தண்ணீர் கொடுக்கக் கூடாது. அதிகரித்து வரும் நீர் மாசுபாடு காரணமாக, சிறுநீரகப் பிரச்னைகளால் குழந்தைகள் பாதிக்கப்படக் கூடும்.

தாய்ப்பால் குடிக்கும் அளவு குறைந்துவிடும். உடல் எடை அதிகரிப்பதில் பிரச்னை ஏற்படும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவதோடு, பல்வேறு தொற்றுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே, மருத்துவர்கள் ஆலோசனையின்றி தண்ணீர் கொடுக்கக் கூடாது.

தொடர் அழுகை, காய்ச்சல், வேர்க்குரு, கொப்பளங்கள், எதுக்களித்தல், வாந்தி எடுத்தல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால், உடனடியாக குழந்தைகள் நல மருத்துவரை அணுகுவது அவசியம்.

இவ்வாறு, டாக்டர் மகேஷ்வரன் கூறினார்.

தண்ணீர் கொடுக்கலாம்?

''தற்போது கோடை வெயில் அதிகரித்து வருவதால், சில குழந்தைகளுக்கு 'டிஹைட்ரேஷன் பீவர்' வருகிறது. இது, உடலில் ஏற்படும் நீர்ச்சத்துக் குறைபாட்டால் ஏற்படும் காய்ச்சல் ஆகும்.மாலை நேரத்தில் இந்த காய்ச்சல் ஏற்படும். இந்த குழந்தைகளுக்கு மட்டும், தண்ணீர் கொடுக்க அறிவுறுத்தப்படுகிறது. ஒவ்வொரு முறையும், சுத்தமான நீரை நன்கு காய்ச்சி, ஆறவைத்து கொடுக்க வேண்டும்.இதில், சிறு தவறு ஏற்பட்டாலும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புண்டு,'' என்றார் டாக்டர் மகேஷ்வரன்.








      Dinamalar
      Follow us