sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

26 கிலோ நகைகளுடன் தலைமறைவான வங்கி மேலாளர் ஆடம்பர வாழ்க்கை கேரள போலீசார் தகவல்

/

26 கிலோ நகைகளுடன் தலைமறைவான வங்கி மேலாளர் ஆடம்பர வாழ்க்கை கேரள போலீசார் தகவல்

26 கிலோ நகைகளுடன் தலைமறைவான வங்கி மேலாளர் ஆடம்பர வாழ்க்கை கேரள போலீசார் தகவல்

26 கிலோ நகைகளுடன் தலைமறைவான வங்கி மேலாளர் ஆடம்பர வாழ்க்கை கேரள போலீசார் தகவல்


ADDED : ஆக 22, 2024 02:57 AM

Google News

ADDED : ஆக 22, 2024 02:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு:கேரள மாநிலத்தில், பாங்க் ஆப் மஹாராஷ்டிரா, வடகரை எடோடி கிளையின் முன்னாள் மேலாளர் மதா ஜெயக்குமார், ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் மதா ஜெயக்குமார், 34. இவர், கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், வடகரை எடோடி பகுதி, பாங்க் ஆப் மகாராஷ்டிராவில் மேலாளராக பணிபுரிந்தார்.

இவர், இரண்டு மாதங்களில், 42 வாடிக்கையாளர்கள் அடகு வைத்த, 17 கோடி ரூபாய் மதிப்புள்ள, 26 கிலோ தங்க நகைகளுடன் தலைமறைவானதும், அந்த நகைகளுக்கு பதில், போலி நகைகளை லாக்கரில் வைத்ததும் உயர் அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்தது. வடகரை போலீசார், கர்நாடகா-, தெலுங்கானா எல்லையான பீதர் மாவட்டத்தில் கைது செய்தனர்.

வடகரை போலீசார் கூறியதாவது: மதா ஜெயக்குமார், ஆதார் அடையாள அட்டை இல்லாமல் புதிய சிம் கார்டு பெற முயற்சித்த போது, தெலுங்கானா போலீசாரிடம் சிக்கிக் கொண்டார். அவரிடம் அவர்கள் நடத்திய விசாரணையில், கேரள போலீசாரால் தேடப்படும் நபர் என்பது அவர்களுக்கு தெரிந்தது. இத்தகவல் கிடைத்தும் தெலுங்கானா சென்று அவரை கைது செய்தோம்.

போலீஸ் தேடுவது அறிந்து தலைமறைவாகி சொகுசு காரில் சென்ற இவரது மனைவியும், நண்பரையும் பிடித்து விசாரித்து வருகிறோம்.

ஓலை குடிசையில் தங்கி வந்திருந்த மதா ஜெயக்குமார், தற்போது லிப்ட் வசதி உள்ள மூன்று மாடி வீட்டில் வசிக்கிறார். ஏராளமான சொகுசு கார்கள் இவர் பெயரில் உள்ளன. தமிழகம் உட்பட பல பகுதிகளில் இவருக்கு பிளாட் மற்றும் நிலம் உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவரது மனைவியின் பெயரில் உள்ள வங்கி கணக்குகளை முடக்கியது மட்டுமல்லாமல் டெபிட், கிரெடிட் கார்டுகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. ஆதார் அட்டை பயன்படுத்தி என்ன செய்தாலும் அந்த தகவல் போலீசாருக்கு கிடைக்கும் வகையில், தீவிர விசாரணை நடக்கிறது.இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us