sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஏப்.,1 முதல் நடைமுறைக்கு வருகிறது மதுபாட்டில்களில் 'பார்கோடு' ஸ்கேன்

/

ஏப்.,1 முதல் நடைமுறைக்கு வருகிறது மதுபாட்டில்களில் 'பார்கோடு' ஸ்கேன்

ஏப்.,1 முதல் நடைமுறைக்கு வருகிறது மதுபாட்டில்களில் 'பார்கோடு' ஸ்கேன்

ஏப்.,1 முதல் நடைமுறைக்கு வருகிறது மதுபாட்டில்களில் 'பார்கோடு' ஸ்கேன்


ADDED : மார் 02, 2025 04:57 AM

Google News

ADDED : மார் 02, 2025 04:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோவையில் உள்ள 'டாஸ்மாக்' மதுக்கடைகளில், சில்லறை விற்பனையில் பாட்டிலுக்கு, 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதை தடுக்க, 'பார்கோடு' ஸ்கேன் செய்யும் நடைமுறை ஏப்., 1 முதல் அமலுக்கு வருகிறது.

வடக்கு மாவட்டத்தில் செயல்படும், 'டாஸ்மாக்' கடை மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சி கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடத்தப்பட்டது. எதற்காக இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது; இதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்ன, எவ்வாறு ஸ்கேன் செய்ய வேண்டும் என்பது தொடர்பாக விளக்கப்பட்டது.

'டாஸ்மாக்' அதிகாரிகள் கூறியதாவது:

அதிகபட்ச சில்லறை விலையை விட கூடுதலாக வசூலிக்கக் கூடாது என்பதால் 'பார்கோடு' ஸ்கேன் நடைமுறை வருகிறது. மதுபான தொழிற்சாலைகளில் இருந்து கிடங்கிற்கு வரும் மதுபானங்கள், எந்தெந்த கடைகளுக்கு அனுப்பப்பட்டன என்கிற விபரம், கம்ப்யூட்டரில் பதிவாகி இருக்கும்.

பார்கோடு ஸ்கேன் செய்த பிறகே, மதுபாட்டில்களை விற்க முடியும். விற்பனை செய்த பணத்தை வங்கியில் செலுத்த வேண்டும். என்னென்ன மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன; எத்தனை பாட்டில்கள் இருப்பில் இருக்கின்றன என்பதை அலுவலகத்தில் இருந்து அறிந்து, தேவையான சப்ளை அனுப்ப முடியும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

இருக்கணும்'

'டாஸ்மாக்' ஊழியர்கள் கூறுகையில், 'கேரளாவில் இருப்பதைபோல், தமிழகத்தில் மதுக்கடை கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும். பில் கொடுக்க,, மதுபானம் வழங்க தனி கவுன்டர் அமைக்க வேண்டும். கடைகளுக்கான வாடகை, மின் கட்டண செலவு, இறக்கு கூலி போன்ற செலவினங்கள் முழுவதையும், 'டாஸ்மாக்' நிர்வாகமே ஏற்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே, இதுபோன்ற திட்டம் பயனளிக்கும்' என்றனர்.








      Dinamalar
      Follow us