ADDED : ஜூலை 28, 2026 08:22 PM
அ நிறம் | அளவு
கோவை: உ.பி., முதல்வர் யோகி ஆதித்ய நாத் பற்றி, கேரளத்தில் அவமரியாதை செய்ததை கண்டித்து, குனியமுத்துாரில் 2021, அக்., 29 ல் பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக, பா.ஜ., மாவட்ட பொது செயலாளர் ரமேஷ்குமார் உட்பட 9 பொறுப்பாளர்கள் மீது, கோவை ஜே.எம்:7, கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. விசாரித்த ஐகோர்ட், 9 பேர் மீதான வழக்கை ரத்துசெய்து உத்தரவிட்டது.
9 பேரும், ஜே.எம்:7, கோர்ட்டில் நேற்று ஆஜராகி ஐகோர்ட் உத்தரவு நகலை சமர்ப்பித்தனர். இதையடுத்து, ரமேஷ்குமார் உட்பட 9 பேரையும் விடுவித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
